Paristamil Navigation Paristamil advert login

ஓய்வை அறிவித்த இந்திய கால்பந்து கேப்டன்

ஓய்வை அறிவித்த இந்திய கால்பந்து கேப்டன்

16 வைகாசி 2024 வியாழன் 08:59 | பார்வைகள் : 7058


இந்திய கால்பந்து அணித்தலைவர் சுனில் சேத்ரி தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

39 வயதாகும் சுனில் சேத்ரி FIFA உலகக்கிண்ண தகுதிப் போட்டிக்கு பின், சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பகிர்ந்த வீடியோவில், ''எனக்கு மறக்க முடியாத ஒரு நாள் உள்ளது. அதை அடிக்கடி நினைவில் கொள்கிறேன்.

என் நாட்டு மனிதனுக்காக நான் விளையாடிய முதல் நாள், அது நம்ப முடியாததாக இருந்தது. கடந்த 19 ஆண்டுகளில் நான் நினைவு கூர்ந்த உணர்வு, கடமை அழுத்தம் மற்றும் அபரிமிதமான மகிழ்ச்சி ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு நல்ல கலவையாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள்'' என தெரிவித்துள்ளார். 

சுனில் சேத்ரி 150 சர்வதேச போட்டிகளில் விளையாடி 94 கோல்கள் அடித்துள்ளார். அதேபோல் 365 கிளப் போட்டிகளில் 158 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்