பிரபல பாடகர் வேல்முருகன் சென்னையில் கைது!
13 வைகாசி 2024 திங்கள் 13:34 | பார்வைகள் : 6113
பிரபல பாடகரும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான வேல்முருகன் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி பாடகர் வேல்முருகன் என்பதும் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 28 நாட்களில் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் மட்டும் இன்றி ’மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ ’பிபி ஜோடிகள்’ உள்பட விஜய் டிவியின் ஒரு சில நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டுள்ளார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் மெட்ரோ ரயில் உதவி மேலாளரை தாக்கிய வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு விருகம்பாக்கம் ஆற்காடு சாலை வேம்புலி அம்மன் சிக்னல் அருகே ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டு பேரிகார்டு போடப்பட்டு இருந்தது.
அப்போது அந்த வழியாக வந்த பாடகர் வேல்முருகன் பேரிகார்டை நகர்த்திவிட்டு காரில் செல்ல முயன்றார். இதை பார்த்த மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவனத்தின் உதவி மேலாளர் வடிவேலு என்பவர் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதனை அடுத்து வேல்முருகனுக்கும் மெட்ரோ ரயில் உதவி மேலாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்த நிலையில் வேல்முருகன் உதவி மேலாளரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் வேல்முருகனை இன்று காலை போலீசார் கைது செய்தனர். ஆபாசமாக பேசுதல், தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan