யாழில் பொலிஸ் துரத்தியதில் நபரொருவர் மின்கம்பத்தில் மோதுண்டு மரணம்
10 வைகாசி 2024 வெள்ளி 17:15 | பார்வைகள் : 7016
யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் மின்கம்பத்தில் மோதுண்டு இன்று இரவு உயிரிழந்துள்ளார்.
பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை இடை மறித்துள்ளனர். எனினும் அவர் நிறுத்தாது பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகள் குறித்த நபர் பயணித்த மோட்டார் வண்டியை உதைந்து விழுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் மேட்டார் சைக்களில் பயணித்த நபர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார் என பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan