Paristamil Navigation Paristamil advert login

அவதானம்! : இன்று தபாலக செயற்பாடுகள் பாதிப்பு!!

அவதானம்! : இன்று தபாலக செயற்பாடுகள் பாதிப்பு!!

2 சித்திரை 2024 செவ்வாய் 05:05 | பார்வைகள் : 12817


இன்று ஏப்ரல் 2 ஆம் திகதி செவாய்க்கிழமை தபாலக செயற்பாடுகள் பாதிக்கப்பட உள்ளன. கடிதங்கள், பொதிகள் விநியோகங்கள் இடம்பெறாது என தெரிவிக்கப்படுகிறது.

தபாலக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை அடுத்தே, இந்த செயற்பாடுகள் தடைக்குள்ளாகிறது. ஊழியர்கள் மரியாதையாக நடத்தப்படுதல் வேண்டும், சமமாக மதிக்கப்படுதல் வேண்டும், ஊதிய உயர்வு வேண்டும் எனும் கோரிக்கைகளை முன் வைத்து இந்த வேலை நிறுத்தம் இடம்பெற உள்ளது.

தபாலக துறையில் பணிபுரியும் inter-union, FO, Sud, CGT மற்றும்  CFTC ஆகிய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்களே வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர்.

அதேவேளை, இன்று பிற்பகலுக்குப் பின்னர் பரிசில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.