கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழில் வாங்கி தருவதாக ஏமாற்றபடும் இலங்கையர்கள்
23 சித்திரை 2024 செவ்வாய் 16:46 | பார்வைகள் : 6039
வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த நபர் ஒருவர் படல்கம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமொன்றை நடத்திக் கொண்டு கனடா மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் தொழில் வழங்குவதாகக் கூறி நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
29 வயதான சந்தலங்காவ கொடெல்ல பிரதேசத்தை சேர்ந்தவரே கைது செய்யப்படடுள்ளார்.
சந்தேகநபர் பன்னல பிரதேசத்தில் இந்த போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தை நடத்தி வருகின்ற நிலையில், கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பெண் ஒருவரிடமும் ஆண் ஒருவரிடமும் 2 இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொள்வதற்காக படல்கம நகருக்கு வந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது அவரது வீட்டில் இருந்து சுமார் 50 கடவுச்சீட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
15 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
24 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan