மோட்டார் சைக்கிள்களுக்கு கட்டுப்பாடு! - பெருகும் ஆதரவு!
15 சித்திரை 2024 திங்கள் 21:00 | பார்வைகள் : 17400
மோட்டார் சைக்கிள்கள் இன்று ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் தொழில்நுட்ப பரிசோதனை (contrôle technique)) சான்றிதழ்கள் வைத்திருத்தல் கட்டாயமானதாகும். அரசின் இந்த முடிவுக்கு எதிராக மோட்டார் சைக்கிள் சாரதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் ஆச்சரிய முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதன்படி, 73% சதவீதமான மோட்டார் சைக்கிள் சாரதிகள் இந்த கட்டுப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆதரவு தெரிவித்துள்ளவர்களில் பெரும்பாலானோர் பெண் சாரதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மாசடைவுக்கு தகுந்தால் போல் பல்வேறு கட்டங்களில் இந்த கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. அது தொடர்பான முழுமையான விபரங்களை <<இங்கே>> அழுத்துவதன் மூலமாக அறிந்துகொள்ளலாம்.
BPCE barometer நிறுவனம் மேற்கொண்டிருந்த கருத்துக்கணிப்பில் இத்தகவல் தெரியவந்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan