Hauts-de-Seine : வெதுப்பக ஊழியர் கத்திக்குத்தில் பலி!!
11 சித்திரை 2024 வியாழன் 17:47 | பார்வைகள் : 10993
வெதுப்பக ஊழியர் ஒருவர் நடுவீதியில் வைத்து கத்திக்குது தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று ஏப்ரல் 10, புதன்கிழமை இரவு இத்தாக்குதல் Bagneux (Hauts-de-Seine) நகரில் இடம்பெற்றுள்ளது. இரவு 11 மணி அளவில் குறித்த 47 வயதுடைய ஊழியர், அவருக்குரிய இடைவேளையின் போது வெளியே சென்றிருந்துள்ளார். அப்போது அவரை இருவர் கொண்ட குழு ஒன்று கத்தியால் தாக்கியுள்ளனர்.
rue Charles-Boileau வீதியில் வைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.
தாக்குதலாளிகள் இருவரும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய நிலையில், அவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan