காவல்துறை வீரர் ஒருவரை கைது செய்த ஜொந்தாமினர்!
6 பங்குனி 2024 புதன் 19:02 | பார்வைகள் : 21934
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்டு காவல்துறை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Val-de-Marne மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறை வீரர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களில் Essonne மாவட்டத்தில் பல்வேறு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களை தொடர்ச்சியாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதில், மேற்படி காவல்துறை வீரர் ஒருவர் இந்த கடத்தலில் தொடர்புபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அதையடுத்து, தேசிய ஜொந்தாமினர் நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த வீரரைக் கைது செய்தனர்.
2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 300 கிலோ கஞ்சா போதைப்பொருள் கடத்தப்படுவதை எதேர்ச்சையாக காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அதையடுத்து இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்ததை அடுத்தே, அடுத்தடுத்த தொடர்புகள் தெரியவந்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan