ஆசிரியருக்கு கத்தி மூலம் கொலை மிரட்டல் விடுத்த மாணவன்!!
15 பங்குனி 2024 வெள்ளி 17:55 | பார்வைகள் : 13818
பாடசாலை அதிபருக்கு கத்தி ஒன்றின் மூலம் அச்சுறுத்தல் விடுத்த மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மார்ச் 15, இன்று வெள்ளிக்கிழமை இச்சம்பவம் Dijon (Côte-d'Or) நகரில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Édouard Herriot உயர்கல்வி பாடசாலையின் அதிபரின் அறைக்குள் ஆயுதத்துடன் நுழைந்த 15 வயதுடைய மாணவன் ஒருவர், அவரைக் கொண்டுவிடுவேன் என அச்சுறுத்தியுள்ளார்.
பின்னர் மாணவன் அங்கிருந்து வெளியே ஓடி தப்பிச் செல்ல, அதிபர் காவல்துறையினரை அழைத்துள்ளார். விரைந்து வந்த காவல்துறையினர் அனைத்து மாணவர்ககையும் வகுப்பறைக்குள் தனிமைப்படுத்திவிட்டு, குறித்த அச்சுறுத்தல் விடுத்த மாணவனைக் கைது செய்தனர்.
குறித்த மாணவன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதேபாடசாலையில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டவர் என அறிய முடிகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan