கிளிநொச்சியில் சிறீதரன் எம்.பி மீது தாக்குதல் முயற்சியால் பதற்றம்!
4 மாசி 2024 ஞாயிறு 10:12 | பார்வைகள் : 6874
கிளிநொச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், பொலிஸாருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது சிறீதரன் எம்.பி மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போராட்டத்தில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போது அதை தடுக்க முற்பட்ட சிறீதரன் எம்பிக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்ற நிலை உருவாகியது.
இதன் போது பொலிஸாரின் பிடியில் இருந்த இளைஞரை மீட்க முற்பட்ட போது சிறீதரன் எம்.பி மீது தாக்குதல் முயற்சி நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த சம்பவத்தை அடுத்து அங்கிருந்தவர்கள் பொலிஸாருக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
27 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan