ஆதித்யா-எல்1 விண்கலம் இன்று எல்-1 புள்ளியை அடைகிறது விஞ்ஞானிகள் தீவிர கண்காணிப்பு
6 தை 2024 சனி 02:31 | பார்வைகள் : 11722
ஆதித்யா எல்-1 விண்கலம் இன்று(ஜன.,06) மாலை 4 மணிக்கு எல்-1 புள்ளியை அடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார். மேலும் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சூரியனை ஆய்வு செய்ய, கடந்த செப்., 2ல், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை, இஸ்ரோ விண்ணில் ஏவியது. பூமியில் இருந்து, 15 லட்சம் கி.மீ., துாரம், 125 நாட்கள் பயணித்து, சூரியனுக்கு அருகில் உள்ள, எல் 1 எனப்படும், லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.
இறுதிக் கட்டத்தில் ஆதித்யா எல்-1விண்கலம்
இந்நிலையில் இன்று(ஜன.,05) மாலை 4 மணிக்கு எல்-1 புள்ளியை ஆதித்யா எல்-1 விண்கலம் அடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார். மேலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியிருப்பதாவது: சூரியனின் செயல்பாடுகளையும், வானிலையில் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் ஆதித்யா எல்-1 விண்கலம் ஆய்வு செய்யும். விண்கலத்தில் உள்ள 7 சாதனங்கள், இந்த ஆய்வில் ஈடுபடும் என்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
27 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan