Paristamil Navigation Paristamil advert login

A7 மற்றும் A9 நெடுஞ்சாலைகள் முடக்கம்! - உக்கிரமடைந்த விவசாயிகள் போராட்டம்!!

A7 மற்றும் A9 நெடுஞ்சாலைகள் முடக்கம்! - உக்கிரமடைந்த விவசாயிகள் போராட்டம்!!

26 தை 2024 வெள்ளி 10:23 | பார்வைகள் : 21550


கடந்த ஜனவரி 16 ஆம் திகதியில் இருந்து இடம்பெற்று வரும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. குறிப்பாக பரிசில் தெற்கு புறநகர் வீதிகள் முடக்கப்பட்டுள்ளன.  குறிப்பாக A7 மற்றும் A9 வீதிகளில் 400 கி. மீ தூரத்துக்கும் அதிகமாக போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. குறித்த சாலைகளை பயன்படுத்துவோர் பயணங்களை பிற்போடுமாறு கோரப்பட்டுள்ளனர். 

அதேவேளை, பரிசுக்கும் பிரான்சின் வடக்கு பகுதிக்குமான பாலமாக உள்ள A1 நெடுஞ்சாலை முடக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதாக தெரிவிம்க்கப்படுகிறது.