பரிசில் தாக்குதல்! - தாக்குதலாளியின் குடும்பத்தினர் மூவர் கைது!!
3 மார்கழி 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 14979
பரிசில் தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதி Armand R இன் குடும்பத்தினர் மூவர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதியின் பெற்றோர்கள் மற்றும் சகோதரி ஒருவரும் கைது செய்யப்பட்டு, காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. நேற்று இடம்பெற்ற தாக்குதலில் பின்னர் அவரது வீடு காவல்துறையினரால் சோதனையிடப்பட்டிருந்தது.
Armand Rajabpour-Miyandoab எனும் முழுப்பெயர் கொண்ட குறித்த பயங்கரவாதி, ஜெர்மனிய சுற்றுலாப்பயணி ஒருவரை கத்தியால் குத்தி கொன்றதுடன், மேலும் இருவரை சுத்தியலால் தாக்கியுள்ளார்.
பின்னர் அவர் காவல்துறையினரால் மின்சாரத்துப்பாக்கியால் சுடப்பட்டு கைது செய்யப்பட்டார். 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த நான்கு காவல்துறையினர் விரைவாக செயற்பட்டு தாக்குதலாளியை கைது செய்தனர்.
சம்பவம் தொடர்பில் முழுமையான தகவல்களை பெற குறித்த நான்கு காவல்துறையினரும் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan