Essonne : கூட்டத்துக்குள் பாய்ந்த மகிழுந்து! - இருவர் படுகாயம்!!

17 மார்கழி 2023 ஞாயிறு 13:52 | பார்வைகள் : 9150
மகிழுந்து ஒன்று பாதசாரிகள் சென்ற பாதைக்குள் பாய்ந்து விபத்தை ஏற்படுத்தியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
Ris-Orangis (Essonne) நகரில் இவ்விபத்து நேற்று சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு இடம்பெற்றது. rue Jules-Guesde வீதியில் பயணித்த மகிழுந்து ஒன்று திடீரென வீதியை விட்டு விலகி, பாதசாரிகளின் பாதையில் நுழைந்தது. இதில் வீதியில் நடந்து சென்ற இருவர் படுகாயமடைந்தனர்.
பின்னர் காவல்துறையினர் தலையிட்டு மகிழுந்து சாரதியை கைது செய்தனர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1