Essonne : கூட்டத்துக்குள் பாய்ந்த மகிழுந்து! - இருவர் படுகாயம்!!
17 மார்கழி 2023 ஞாயிறு 13:52 | பார்வைகள் : 11751
மகிழுந்து ஒன்று பாதசாரிகள் சென்ற பாதைக்குள் பாய்ந்து விபத்தை ஏற்படுத்தியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
Ris-Orangis (Essonne) நகரில் இவ்விபத்து நேற்று சனிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு இடம்பெற்றது. rue Jules-Guesde வீதியில் பயணித்த மகிழுந்து ஒன்று திடீரென வீதியை விட்டு விலகி, பாதசாரிகளின் பாதையில் நுழைந்தது. இதில் வீதியில் நடந்து சென்ற இருவர் படுகாயமடைந்தனர்.
பின்னர் காவல்துறையினர் தலையிட்டு மகிழுந்து சாரதியை கைது செய்தனர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan