யாழில் ஹெரோயினுக்காக கோயிலில் தங்க காசுகளை கொள்ளையிட்ட பூசாரி
14 மார்கழி 2023 வியாழன் 05:48 | பார்வைகள் : 6221
ஹெரோயின் போதைப் பொருளை பயன்படுத்த கோயிலில் இருந்த 5 தங்க காசுகளை கொள்ளையிட்டு, அடகு கடையில் அடமானம் வைத்த யாழ்ப்பாணம் பிரதேசத்தில் உள்ள கோயில் ஒன்றில் பூசாரியை பொலிஸார் நேற்று (13) கைது செய்துள்ளனர்.
பூசாரி தங்க காசுகளை அடகு வைத்தமைக்கான பற்றுச்சீட்டையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். போதைப் பொருளுக்கு அடிமையான இந்த பூசாரி, கைது செய்யப்படும் போதும் போதைப் பொருளை பயன்படுத்தி இருந்த காரணத்தினால், அவர் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு கோயில் பூசாரி ஒருவர் கோயில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட சம்பவம் இந்த வாரம் நடந்தது.
பொலிஸார் அந்த பூசாரியை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நேற்று கைது செய்யப்பட்ட கோயில் பூசாரி இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan