Paristamil Navigation Paristamil advert login

உங்களை மாதிரி கஞ்சப்பயலுகளா?

உங்களை மாதிரி கஞ்சப்பயலுகளா?

29 தை 2013 செவ்வாய் 08:59 | பார்வைகள் : 17035


 ஒருவர் நிறைய பெண்களை மோகித்தவர். அவருக்கு திருமணம் ஆகிறது. அவர் தன் மனைவியிடம் கூறுகிறார், ஒவ்வொரு முறை உறவு கொள்ளும்போதும் நான் 100ரூபாய் தருவேன் அதனை நீ ஒரு உண்டியலில் போட்டு வைக்கவேண்டும் என்கிறார்.

 
மனைவி ஏன் என்று கேட்கிறாள், எனது பழக்கம் அப்படி உடனடியாக மாற்றிக் கொள்ள முடியவில்லை எனவே பொறுத்துக்கொள் கொஞ்ச நாளைக்குத்தான் பிறகு உண்டியலை உடைத்து விடலாம் என்கிறார். மனைவியும் ஒப்புக்கொள்கிறாள்
 
நாட்கள் கழிகிறது உண்டியலில் 100 ரூபாய் தாள்கள் சேரத்தொடங்குகிறது.
 
ஒருநாள் பண நெருக்கடியில் சிக்கிய கணவன் உண்டியலை உடை என்கிறான். இனிமேல் உண்டியல் தேவையில்லை என்ற மகிழ்ச்சியில் மனைவியும் உண்டியலை உடைக்கிறாள்.
 
கணவன் அதிர்ந்து போகிறான் என்ன நான் ஒவ்வொரு முறையும் 100ரூபாய்தானே கொடுத்தேன்! அதில் எப்படி 500 ரூபாய் நோட்டுக்கள், 1000 ரூபாய் நோட்டுக்களெல்லாம் வந்தது? என்கிறான்.
 
அதற்கு மனைவி, "வரவென்னெல்லாம் என்ன உங்களை மாதிரி கஞ்சப்பயலுகளா? என்று குண்டைத் தூக்கிப் போட்டாளே பார்க்கலாம்!