Paristamil Navigation Paristamil advert login

நட்பினை தேடி..!!!

நட்பினை தேடி..!!!

21 மார்கழி 2017 வியாழன் 13:40 | பார்வைகள் : 14515


நட்பினை தேடி
கண்முன்னே இருந்த உறவுகள் 
விலகிச் செல்கையில், 
கண்கள் ஏனோ கலங்குகிறது
 
நேற்றைய நினைவுகள் 
நினைக்கையில், 
நெஞ்சம் ஏனோ குமுறி அழுகிறது
 
எனக்கென யாரும் இல்லையென்ற போதிலும், 
என் மனம் உறவை நாடுது. 
தாய்மனம் அருகினில் இருந்த போதிலும், 
நட்பினை தேடி வாடுது