Paristamil Navigation Paristamil advert login

அதிக வரி செலுத்தியிருந்தால், விரைவில் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம்!!

அதிக வரி செலுத்தியிருந்தால், விரைவில் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம்!!

29 ஆனி 2026 திங்கள் 22:06 | பார்வைகள் : 426


ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில், வரித்துறை வருமான வரியாக அதிகமாக வசூலிக்கப்பட்ட தொகையை கோடிக்கணக்கான வரி செலுத்துவோருக்கு திருப்பிச் செலுத்துகிறது. இந்த ஆண்டு, நீங்கள் அதற்கு தகுதியானவராக இருந்தால், ஜூலை 24 முதல் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.

வருமான வரி அறிவிப்புகள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, ஒவ்வொரு குடும்பத்தின் வருமான விவரங்களையும் ஆய்வு செய்து, அதிகமாக வரி வசூலிக்கப்பட்டிருந்தால், பொது நிதி இயக்குநரகம் (DGFiP) தானாகவே அந்தத் தொகையை திருப்பி வழங்குகிறது.

பணம் எப்போது கிடைக்கும்?

திருப்பிச் செலுத்தும் தொகையானது ஜூலை 24 அல்லது ஜூலை 31 ஆகிய திகதிகளில் உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். வங்கி பரிமாற்றத்தில் பொதுவாக:

“DIRECTION GENERALE DES FINANCES PUBLIQUES” என்ற பெயரும், “SOLDE IMPOT REVENUS 2025” என்ற குறிப்பும் இடம்பெறும்.

நீங்கள் ஏதேனும் செய்ய வேண்டுமா?

இல்லை. இந்தப் பணம் முழுமையாக தானியங்கி முறையில் வழங்கப்படும். உங்கள் வங்கி விவரங்கள் வரித்துறையிடம் இல்லையெனில், அவர்கள் அஞ்சல் மூலம் ஒரு காசோலையை (Cheque) அனுப்புவார்கள்.

எவ்வளவு தொகை கிடைக்கலாம்?

2025 ஆம் ஆண்டில் சராசரியாக ஒவ்வொரு குடும்பமும் 1,017 யூரோக்களை பெற்றது. சிலர் கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும். மாறாக, 13.1 மில்லியன் குடும்பங்கள் போதுமான அளவு வரி செலுத்தாததால், கூடுதல் தொகையைச் செலுத்த வேண்டியிருந்தது. 

திருப்பி செலுத்தும் முறை:

300 யூரோக்கள் அல்லது அதற்குக் குறைவாக இருந்தால், செப்டம்பர் 25 அன்று ஒரே தவணையில் வசூலிக்கப்படும். 300 யூரோக்களுக்கு  மேல் இருந்தால், செப்டம்பர் 25 முதல் டிசம்பர் 28 வரை நான்கு மாத தவணைகளாக வசூலிக்கப்படும்.

முக்கிய குறிப்பு: பணம் கிடைத்த பிறகு, உங்கள் வரி அறிவிப்பில் (Avis d'imposition) குறிப்பிடப்பட்ட தொகையுடன் அது பொருந்துகிறதா என்பதை சரிபார்க்கவும்.