ரூ.23 லட்சம் மோசடி; முன்னாள் திமுக அமைச்சர் சிவசங்கர் மீது ஓய்வுபெற்ற போலீஸ் புகார்
29 ஆனி 2026 திங்கள் 08:24 | பார்வைகள் : 366
போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.23 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் திமுக அமைச்சர் சிவசங்கர் மீது ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி புகார் அளித்துள்ளார்.
திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் சிவசங்கர். இவர் மீது காவல் ஆணையகரத்தில் ஓய்வு பெற்ற எஸ்எஸ்ஐ சீனிவாசன் ஒரு பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் புகார் மனுவில்; எனது மகனுக்கு போக்குவரத்துத்துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அப்போதைய அமைச்சர் சிவசங்கர் ரூ.23 லட்சம் கேட்டார். அவருக்கு நெருக்கமானவர் எனக் கூறி இளஞ்செழியன் என்பவர் வங்கிக் கணக்குகளில் இந்தப் பணத்தை செலுத்தினேன். மேலு, சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் சிவசங்கரையும் சந்திக்க இளஞ்செழியன் ஏற்பாடு செய்தார்.
இந்த சந்திப்பின் போது, எனது மகனுக்கு போக்குவரத்து துறையில் வேலை உறுதியாகி விட்டதாகவும், பயப்பட வேண்டாம் வேலை கிடைத்துவிடும் என்று சிவசங்கர் உறுதியளித்தார். நீங்கள் கொடுத்த பணம் தன்னிடம் வந்து விட்டதாக அவர் உறுதிபடுத்தினார். பணத்தை வாங்கிக் கொண்டு வேலை கொடுக்காமல் இளஞ்செழியனும், சிவசங்கரும் ஏமாற்றி விட்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து, முதற்கட்டமாக இளஞ்செழியன் மீது சென்னை அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர்.
ஏற்கனவே போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி சிக்கியுள்ள நிலையில், மற்றொரு முன்னாள் அமைச்சரும் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan