ரவி மோகன் பணிப்பெண்களை சிறை பிடித்தாரா ?
23 ஆனி 2026 செவ்வாய் 16:49 | பார்வைகள் : 140
ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் ரவி. ஜெயம் படம் ஹிட் என்பதால் ஜெயம் ரவியாக மாறினார். அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து முக்கிய நடிகர்களில் ஒருவராக மாறினார்.
ஆர்த்தி என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரவி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக ஆர்த்தியை ரவி பிரிந்து வாழ்ந்து வருகிறார் ரவி. தனது மனைவி மற்றும் மாமியார் குடும்பத்தின் மீது அடுக்கடுக்கான பல புகார்களையும் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார் ரவி மோகன்..
இந்நிலையில்தான் ரவி மோகன் வீட்டு பணிப்பெண் வீடு திரும்பவில்லை என அந்த பெண்ணின் வீட்டை சேர்ந்தவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இரண்டு பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் வீட்டில் சிறைபிடிக்கப்பட்டதாக அவர்கள் புகார் கூறியிருந்தனர்.
ஆனால் பணிப்பெண்கள் பணத்தை திருடியதாக நடிகர் ரவி மோகன் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அதேநேரம் சட்ட விரோதமாக நீங்கள் விசாரிக்க கூடாது என போலீசார் அறிவுறுத்தியிருக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan