எம்.எல்.ஏ.,க்களுக்கு தி.மு.க., புதிய உத்தரவு
19 ஆனி 2026 வெள்ளி 09:17 | பார்வைகள் : 189
தி.மு.க., தலைமையகமான சென்னை அறிவாலயத்தில் நேற்று முன்தினம் நடந்த தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளதாவது:
சட்டசபை கூட்டத்தொடரில், மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து, த.வெ.க., அமைச்சர்களிடம் தி.மு.க., - - எம்.எல்.ஏ.,க்கள் விவாதிக்க வேண்டும். ஆனால், த.வெ.க., அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு விழாக்கள் மற்றும் ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம்.
கலெக்டர்கள் நடத்தும் ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்று, தொகுதிகளில் வளர்ச்சி பணிகளை கவனியுங்கள். இன்னும் ஆறு மாத காலத்திற்கு தான், த.வெ.க., ஆட்சி நடக்கும். அதன் பின், நம்முடைய ஆட்சி தான் நடக்கும்.
சட்டம் - ஒழுங்கு பிரச்னை, மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசியுள்ளதாக தெரிகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan