Paristamil Navigation Paristamil advert login

கருத்துக்கணிப்பு- பாலியல் குற்றவாளிகளின் பதிவுகள் பொதுமக்கள் பார்வைக்கு வேண்டும்!

கருத்துக்கணிப்பு- பாலியல் குற்றவாளிகளின் பதிவுகள் பொதுமக்கள்  பார்வைக்கு வேண்டும்!

18 ஆனி 2026 வியாழன் 21:53 | பார்வைகள் : 328


CNEWS, Europe 1 மற்றும் JDD ஆகியவற்றுக்காக CSA நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பின்படி,76% பிரெஞ்சு மக்கள்  பாலியல் குற்றவாளிகள் மற்றும் வன்முறை குற்றவாளிகள் பற்றிய பாலியல் அல்லது வன்முறைக் குற்றவாளிகளின் சட்டப்பதிவான FIJAISV (Le Fichier judiciaire automatisé des auteurs d'infractions sexuelles ou violentes ) இனை பொதுமக்கள் அறியக்கூடிய நிலையை ஏற்படுத்துவதற்கான நிலையை உருவாக்க வேண்டும் என கருதுகின்றனர்.

ஏன் இந்த கேள்வி மீண்டும் எழுகிறது?

பதினொரு வயதான லிஹானா கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரானஜெரோம் பார்தெல்லா மீது இருந்த பழைய பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வந்தமையால் இந்தக் கேள்வி எழுகின்றது.


பல அரசியல் தலைவர்கள்

FIJAISV பொதுமக்களுக்கு திறக்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர்.

இந்த கோரிக்கையை பெரும்பாலான பிரான்சுக்காரர்கள் ஆதரிக்கின்றனர்.


வயது அடிப்படையிலான முடிவுகள்

18–24 வயது : 91% ஆதரவு (மிக அதிகம்)

65 வயதுக்கு மேற்பட்டவர்கள் : 70% ஆதரவு

அனைத்து வயதுக் குழுக்களிலும் “ஆதரவு” முன்னிலையில் உள்ளது.


அரசியல் சார்பு அடிப்படையிலான வேறுபாடுகள்

இடதுசாரி (Gauche) — பிளவு
மொத்த இடதுசாரி : 62% ஆதரவு

LFI + Écologistes : 64%

PS (சோசலிச கட்சி) : 51% எதிர்ப்பு

வலதுசாரி (Droite) — மிகப்பெரிய ஆதரவு

Les Républicains : 85% ஆதரவு

Rassemblement National : 93% ஆதரவு

வலதுசாரியில் இந்த நடவடிக்கைக்கு மிகப்பெரிய ஒப்புதல் உள்ளது.

FIJAISV என்றால் என்ன?
20 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட இந்த பதிவு:

சிறுவர்கள் மீதான பாலியல் குற்றங்கள்

பாலியல் வன்முறை

குழந்தை அசிங்கப்படங்கள் வைத்திருத்தல்

சிறுவர்களை கெடுப்பது

போன்ற குற்றங்களில் தண்டிக்கப்பட்டவர்களைப் பதிவு செய்கிறது.

இந்த பதிவை நீதித்துறை மற்றும் அனுமதி பெற்ற அதிகாரிகள் மட்டுமே அணுக முடியும்.


கல்வித் துறையில் பணியமர்த்தும் போது சரிபார்ப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.