Paristamil Navigation Paristamil advert login

'இந்தோ-பசிபிக் கட்டளைப் பிரிவு' மீண்டும் 'பசிபிக் கட்டளைப் பிரிவு' என பெயர் மாற்றம்!

 'இந்தோ-பசிபிக் கட்டளைப் பிரிவு' மீண்டும் 'பசிபிக் கட்டளைப் பிரிவு' என பெயர் மாற்றம்!

18 ஆனி 2026 வியாழன் 06:22 | பார்வைகள் : 212


அமெரிக்காவின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய இராணுவக் கட்டளைப் பிரிவான ‘அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைப் பிரிவு’, மீண்டும் அதன் வரலாற்றுப் பெயரான ‘அமெரிக்க பசிபிக் கட்டளைப் பிரிவு’ என்ற பெயருக்கு மாற்றப்படுவதாக அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஹாரி எஸ். ட்ரூமனினால் கடந்த 1947ஆம் ஆண்டு ஜனவரி 01 அன்று இந்த இராணுவப் பிரிவு முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்டது. அதன்பின்னர், சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கட்டளைப் பிரிவு என்ற பெயரிலேயே இது இயங்கி வந்தது.  

கடந்த 2018ஆம் ஆண்டில், டொனால்ட் ட்ரம்பின் முதலாவது ஆட்சிப் காலத்தின் போது, இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையேயான பாதுகாப்புத் தொடர்புகள் மற்றும் பிராந்தியத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸால் இப்பிரிவுக்கு 'இந்தோ-பசிபிக் கட்டளைப் பிரிவு' எனப் பெயர் மாற்றப்பட்டது.

தற்போது சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அதன் பழைய பாரம்பரியப் பெயருக்கே அமெரிக்கா திரும்பியுள்ளது.

"பாரம்பரியமிக்க அமெரிக்காவின் 'இந்தோ-பசிபிக் கட்டளைப் பிரிவு என்ற பெயரை மீண்டும் சூட்டுவது, பசிபிக் பிராந்தியத்தில் சேவை செய்யும் அனைத்து வீரர்களிடையேயும் பெருமையையும் கூட்டு உணர்வையும் வளர்ப்பதுடன், இக்கட்டளைப் பிரிவின் ஆழமான வரலாற்று வேர்களைக் கௌரவிப்பதாக அமையும். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பிராந்தியப் பாதுகாப்பு, கொரியப் போர், வியட்நாம் போர் மற்றும் எண்ணற்ற மனிதாபிமான உதவிகளின் போது இப்பெயரே பல தசாப்த கால இராணுவ பாரம்பரியத்தைச் சுமந்து நின்றது." என அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் விளக்கமளித்துள்ளது.

பெயர் மாற்றப்பட்ட போதிலும், இந்த இராணுவக் கட்டளைப் பிரிவின் பொறுப்புகள் அல்லது எல்லைகளில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

அதன்படி, எல்லைகள் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையிலிருந்து இந்தியாவின் மேற்கு எல்லை வரையான பரந்த கடல் மற்றும் நிலப்பரப்பு பகுதிகள் தொடர்ந்து இந்த பசிபிக் கட்டளைப் பிரிவின் கீழேயே இருக்கும்.

பிராந்திய நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளிகளுடன் இணைந்து பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான மற்றும் திறந்த வான்-கடல் போக்குவரத்தை உறுதி செய்யும் முதன்மை நோக்கம் எவ்வித மாற்றமுமின்றி தொடரும்

தற்போது அட்மிரல் சாமுவேல் பாப்பாரோ தலைமையில் இயங்கும் இந்த பசிபிக் கட்டளைப் பிரிவின் கீழ் சுமார் 375,000 சிவிலியன் மற்றும் இராணுவப் பணியாளர்கள் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.