Paristamil Navigation Paristamil advert login

நிலவின் கால்ப்படாத பகுதிக்குள் சீனா!

நிலவின் கால்ப்படாத பகுதிக்குள் சீனா!

26 கார்த்திகை 2020 வியாழன் 12:50 | பார்வைகள் : 14434


அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து நிலவில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வரும் சீனா. நிலவிலிருந்து பாறைத்துகள்களை எடுக்க விண்கலத்தை செலுத்தியுள்ளது.

 
உலகில் அமெரிக்கா, ரஷ்யாவை தொடர்ந்து நிலவு குறித்த ஆராய்ச்சியில் தீவிரமாக சீனா ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் நிலவிலிருந்து பாறைத் துகள்களை சேகரித்து வந்து ஆய்வுகள் மேற்கொண்டு வரும் நிலையில், சீனாவும் சேஞ்ச் 5 என்ற ஆளிள்ளா விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியுள்ளது.
 
நேற்று ஏவப்பட்ட இந்த விண்கலம் தேவையான மாதிரிகளை சேகரித்து டிசம்பர் இறுதியில் பூமிக்கு திரும்பும் என கூறப்படுகிறது. மேலும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளே கால்பதிக்காத நிலவின் “ஓஷன் ஆப் ஸ்டோர்ம்ஸ்” பகுதியில் இந்த விண்கலம் தரையிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்