கடல்வழிப் போக்குவரத்து பாதுகாப்போம்; ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்
17 ஆனி 2026 புதன் 11:43 | பார்வைகள் : 126
மூன்று இந்தியர்கள் உயிரிழந்ததை அடுத்து, டிரம்ப் முன்னிலையில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் மாலுமிகளின் பாதுகாப்பை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட ஜி7 தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து நாடுகளும் கடல்வழி போக்குவரத்து பாதுகாப்பாக இருப்பதையும், மாலுமிகள் அச்சமின்றி தங்கள் கடமைகளை ஆற்ற முடிவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். ஓமன் அருகே அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் பிரதமர் மோடி பேசியதாவது: மோதல்களுக்கு தீர்வுகளை பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலமே காண முடியும் என்று இந்தியா உறுதியாக நம்புகிறது. இந்தியாவில் நாங்கள், உலகத்தை ஒரே குடும்பமாகப் பார்க்கிறோம். நாம் கொடையாளர்-பெறுநர் என்ற மனப்பான்மையைக் கடந்து, சமமான பங்காளிகளாகச் செயல்பட வேண்டும்.
நாம் வெறுமனே ஒருவருக்கொருவர் பக்கத்தில் நிற்பதாக இல்லாமல், ஒன்றாகப் பயணிக்க வேண்டும். உறவுகள் சார்புநிலையுடன் அல்லாமல், கண்ணியத்துடன் இருக்க வேண்டும். பயிற்சி, திறன் மேம்பாடு, நீர்வளம், விவசாயம் மற்றும் எரிசக்தி ஆகியவற்றில் கவனம் செலுத்துவது உலகளாவிய சவால்களுக்குத் தீர்வுகளை வழங்கவும் உதவுகின்றன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ஜி7 உச்சிமாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan