Paristamil Navigation Paristamil advert login

செம்மணி புதைகுழி அகழ்வு - நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு விஜயம்

செம்மணி புதைகுழி அகழ்வு - நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு விஜயம்

16 ஆனி 2026 செவ்வாய் 17:55 | பார்வைகள் : 187


செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நேரில் விஜயம் செய்யவுள்ளது.

குறித்த குழுவினர் அகழ்வாய்வு தளத்திற்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதி கோரி செவ்வாய்க்கிழமை (16) நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

அதன் அடிப்படையில் புதன்கிழமை (17) வழக்கு அழைக்கப்பட்டு, நீதி அமைச்சர் குழுவை அனுமதிப்பது தொடர்பிலான அறிவித்தலை அறிவிக்கும் என சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை குறித்த அமைச்சர் குழுவுடன் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் விசேட பிரநிதிகள் குழுவும் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.