ஆண்களே புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது..
15 ஆனி 2026 திங்கள் 13:54 | பார்வைகள் : 291
ஒரு ஆண் தான் குழந்தையாக இருந்தபோது தன் தந்தையிடமிருந்தோ, தாயிடமிருந்தோ சரியான மரியாதை அல்லது பாசத்தைப் பெறவில்லை என்றால், அவன் போதுமான அளவு கவனிக்கப்படவில்லை,பாராட்டப்படவில்லை என்று நினைத்து வளர்வான். பின்னாளில் தன் காதலியோ, மனைவியோ எவ்வளவு அன்பு செலுத்தினாலும், சிறுவயதிலிருந்து அனுபவித்த அவனுடைய உள் காயங்களால், அவளை முழுமையாக நம்பாமல் தடுமாறுகிறான்.
அவளுக்கு அந்த அன்பை கொடுக்க முயற்சித்தாலும் மன ரீதியாக தடுமாறுகிறான்.அதனால்தான் இன்று பல பெண்கள், பல குடும்பங்களில் உணர்ச்சி ரீதியாக சோர்வடைகிறார்கள். ஒரு ஆணின் மீது அவர்கள் அன்பு, ஆதரவு, பொறுமை மற்றும் புரிதலைப் பொழிந்தாலும், அவனுடைய காயங்கள் அவளுடைய அன்பை விட சத்தமாகப் பேசுகின்றன.
அன்புள்ள பெண்களே.. இதில் உங்கள் தவறு ஏதும் அல்ல. உங்களிடம் குறை இல்லை. நீங்கள் நேசிக்கப்பட முடியாதவள் அல்ல. ஒரு வெற்றிடத்தை நிரப்ப நீ முயற்சி செய்து கொண்டிருக்கிறாய். நீ சலிக்காமல் கொடுக்கிறாய். பொறுமை காக்கிறாய். அவன் இறுதியாக உன்னைப் பார்ப்பான், இறுதியாக உன்னைப் போற்றுவான், இறுதியாக உன்னைத் தேர்ந்தெடுப்பான் என்று நம்புகிறாய். ஆனால் அந்தச் செயல்பாட்டில் நீ உன்னையே இழந்து விடாமல் பார்த்துக்கொள்.
உறவைப் காப்பதற்காக ஒரு பெண் தொடர்ந்து தன் அமைதியைக் கொடுக்கும்போது, அவள் அதை தன் உடலில் உணரத் தொடங்குகிறாள். சோர்வு, பதட்டம், ஒற்றைத் தலைவலி, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள்... இவை வெறும் உடல் அறிகுறிகள் அல்ல; அவை உணர்ச்சி சமிக்ஞைகள். அவளுடைய இதயம் நீண்ட காலமாக கனமாகவே இருக்கும்போது அவளுடைய உடல் கத்தத் தொடங்குகிறது.
தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்... பெண் நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமாக உங்களுக்குக் கொடுக்கிறாள். அவள் உன்னை நேசிப்பது மட்டுமல்ல; அவள் உங்கள் வலிக்கு மருந்து வைத்திருக்கிறாள், தன் சொந்த அமைதியைத் தியாகம் செய்கிறாள், மேலும் உன்னுடையதை நீ அடைய வேண்டும் என்பதற்காக தன் சொந்தத் தேவைகளை அடிக்கடி மௌனமாக்குகிறாள். ஆனால் அவளால் அதை எப்போதும் செய்ய முடியாது. அவளை விரைவில் புரிந்துகொள்ள முயற்சி செய்.
நீங்கள் குணமடைய வேண்டிய நேரம் இது. சிறுவயது பாரங்களை தூக்கி ஏறிய வேண்டிய நேரம் இது. உங்கள் இருவரின் உறவிற்காக மட்டுமல்ல, அன்பு, கவனம் மற்றும் மரியாதைக்கு தகுதியான உங்களுக்குள் இருக்கும் புதிய மனிதனுக்காகவும்.
மௌனத்தின் மூலம் அன்பைக் கேட்பதை நிறுத்திவிட்டு, மொழிகளின் மூலம் அன்பைப் பெறத் தொடங்க வேண்டிய நேரம் இது.உன்னை நேசிக்க முயற்சிக்கும்போது அவள் துன்பப்பட அனுமதிக்காதே. உன்னை அரவணைக்க முயற்சிக்கும்போது அவள் சங்கடப் பட அனுமதிக்காதே.
வளர்ச்சியைத் தேர்ந்தெடு. மாற்றத்தை தேர்ந்தெடு. மனதை தெளிவாக்கு. குழப்பத்தை விடு. அமைதியைக் கொண்டுவரும் ஆணாக நிமிர்ந்து நில். துணிவுடன் கரம் கோர்த்து கம்பீர நடை போடு. அதில் உருவாகும், ஒரு அழகிய குடும்பம் எனும் பல்கலைக்கழகம்.ஏனென்றால் ஒரு மனிதன் சரியாகும்போது, அவனுடைய அன்பு முழுமை பெறுகிறது. அவனுடைய இருப்பு பிறருக்கு மருந்தாகிறது.அவனுடைய வெற்றி பலருக்கு ஊக்கமாகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan