இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுவதாக மஹிந்த அறிவிப்பு
10 வைகாசி 2026 ஞாயிறு 17:27 | பார்வைகள் : 188
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் செவ்வாய்க்கிழமை முன்னிலையாகுவேன். அழைக்கப்படும் சகல விசாரணைகளுக்கும் செல்வேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் பூதலுடலுக்கு ஞாயிற்றுக்கிழமை (10) அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
கபில சந்திரசேன நாட்டுக்கு சேவையாற்றினார். இவரின் இறப்பு எமக்கு பாரியதொரு இழப்பாகும். அவரது இறப்புக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் செவ்வாய்க்கிழமை முன்னிலையாகுவேன். அழைக்கப்படும் சகல விசாரணைகளுக்கும் செல்வேன் என்றார்.
சர்ச்சைக்குரிய எயார் பஸ் கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேன கடந்த வெள்ளிக்கிழமை (8) மர்மமான முறையில் உயிரிழந்தார்
இவ்வாறான பின்னணியில் விமான கொள்வனவு தொடர்பில் கபில சந்திரசேன இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்கு வழங்கிய வாக்குமூலத்துக்கமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசாரணைக்காக நாளைய தினம் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan