Paristamil Navigation Paristamil advert login

ஹாண்டா வைரஸ்: பிரெஞ்சு பயணிகள் இடமாற்றம்!! நோய் அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் கட்டுப்பாடு!!

ஹாண்டா வைரஸ்: பிரெஞ்சு பயணிகள் இடமாற்றம்!! நோய் அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் கட்டுப்பாடு!!

8 வைகாசி 2026 வெள்ளி 22:47 | பார்வைகள் : 329


ஹாண்டா வைரஸ் உறுதி செய்யப்பட்ட ஒருவருடன் ஒரே விமானத்தில் பயணம் செய்ததால் தொடர்பு நபராக அடையாளம் காணப்பட்ட ஒரு பிரெஞ்சு நபர் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு லேசான அறிகுறிகள் இருந்தபோதிலும், செய்யப்பட்ட பரிசோதனையில் ஹாண்டா வைரஸ் இல்லை என்று பிரான்ஸ் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த நபர் உட்பட எட்டு பிரெஞ்சு குடிமக்கள் “MV Hondius” கப்பலில் பயணம் செய்யவில்லை. ஆனால், 2026 ஏப்ரல் 25 அன்று செயிண்ட் ஹெலேனாவிலிருந்து (Sainte-Hélène) ஜொஹான்ஸ்பர்க்கு (Johannesburg) சென்ற விமானத்தில், பின்னர் வைரஸ் உறுதி செய்யப்பட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்ததால் அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது “MV Hondius” கப்பலில் உள்ள ஐந்து பிரெஞ்சு பயணிகள், கப்பல் கனாரி தீவுகளுக்கு வந்தவுடன் அடுத்த 24 முதல் 48 மணிநேரத்திற்குள் பிரான்சுக்கு பாதுகாப்புடன் அழைத்து செல்லப்படுவார்கள். அவர்களுக்கு கனாரி தீவுகளிலும் பின்னர் பிரான்சிலும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படும்.

img_69fe4bc6b7c21.jpg

அறிகுறிகள் காணப்படும் நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்படுவார்கள்; முடிவுகள் வரும் வரை அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். அறிகுறிகள் இல்லாதவர்களும் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, சுமார் ஆறு வாரங்கள் வரை கட்டுப்பாடுகளுடன் வாழ வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.