அல்ஜீரியாவுடன் உறவை மீண்டும் மேம்படுத்த மக்ரோன் விருப்பம்!!
8 வைகாசி 2026 வெள்ளி 17:00 | பார்வைகள் : 2363
Emmanuel Macron அல்ஜீரியாவுடன் மீண்டும் பயனுள்ள மற்றும் நம்பிக்கையூட்டும் உரையாடலை உருவாக்க விரும்புகிறார் என்று Élysée தெரிவித்துள்ளது. குறிப்பாக, அல்ஜீரியாவில் சிறையில் உள்ள பிரெஞ்சு விளையாட்டு பத்திரிகையாளர் Christophe Gleizes அவர்களை பிரான்சுக்கு மீண்டும் அழைத்து வருவது முக்கிய முன்னுரிமையாகக் கூறப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அல்ஜீரியாவில் இருந்த பிரான்ஸ் தூதர் Stéphane Romatet தனது பணிகளை மீண்டும் தொடங்குகிறார்.
இனறு, பிரான்ஸ் ஆயுதப்படைகளுக்கான துணை அமைச்சர் Alice Rufo அல்ஜீரியாவின் Sétif நகரத்திற்கு சென்று 1945 மே 8 அன்று நடந்த துயர சம்பவங்களை நினைவுகூர உள்ளார். அந்த காலத்தில் பிரான்ஸ் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களை ஒடுக்கியபோது ஆயிரக்கணக்கான அல்ஜீரியர்கள் உயிரிழந்தனர்.
Christophe Gleizes 2024ஆம் ஆண்டு Kabylie பகுதியில் செய்தி சேகரிக்கும் போது கைது செய்யப்பட்டார். “தீவிரவாதத்தை ஆதரித்தது” என்ற குற்றச்சாட்டில் அவருக்கு ஏழு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அவர் மேல்முறையீட்டை கைவிட்டதால், அல்ஜீரிய அதிபர் Abdelmadjid Tebboune அவரால் மன்னிப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
2017 முதல் Emmanuel Macron அல்ஜீரியாவுடன் வரலாற்று மற்றும் அரசியல் உறவுகளை மேம்படுத்த முயன்றாலும், இரு நாடுகளுக்கும் இடையில் பல பதற்றங்கள் தொடர்ந்து ஏற்பட்டுள்ளன. இருப்பினும், வரலாற்றை நேர்மையாக ஏற்றுக்கொண்டு, எதிர்காலத்தில் இரு மக்களுக்கும் நன்மை தரும் உறவை உருவாக்க வேண்டும் என்று பிரான்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan