Paristamil Navigation Paristamil advert login

த.வெ.க.,வுக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம்: கூட்டணி கட்சிகளிடம் கேட்டுக் கொண்ட ஸ்டாலின்

த.வெ.க.,வுக்கு ஆதரவு கொடுக்க வேண்டாம்: கூட்டணி கட்சிகளிடம் கேட்டுக் கொண்ட ஸ்டாலின்

6 வைகாசி 2026 புதன் 06:24 | பார்வைகள் : 728


தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்னை அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது, 'தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டாம்' என, கூட்டணி கட்சிகளிடம் அவர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. சென்னை கொளத்துார் தொகுதியில் ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார். அவரது தேர்தல் தோல்விக்கு, கட்சியின் மாவட்ட நிர்வாகி ஒருவரே முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ஸ்டாலினை சந்திப்பதற்காக, தி.மு.க., நிர்வாகிகள், வெற்றி பெற்ற வேட்பாளர்களும் தோல்வி அடைந்த வேட்பாளர்களும் அறிவாலயம் வந்தனர். கூட்டணி கட்சிகளின் தலைவர்களான ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலர் திருமாவளவன், இந்திய கம்யூ., கட்சியின் மாநில செயலர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநில செயலர் சண்முகம் உள்ளிட்டோரும் வந்தனர்.

அப்போது, புதிய ஆட்சி குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஸ்டாலின் விவாதித்துள்ளார். 'ஆட்சி அமைக்க த.வெ.க., தரப்பில் ஆதரவு கேட்டால் கொடுக்க வேண்டாம்; உள்ளாட்சி தேர்தலில், நம் கூட்டணி முழு வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது' என, ஸ்டாலின் கூறியதாக தெரிகிறது.