Paristamil Navigation Paristamil advert login

ஈரான் தாக்குதல்கள் “ஏற்க முடியாதவை” — எமானுவல் மக்ரோன்

ஈரான் தாக்குதல்கள் “ஏற்க முடியாதவை” — எமானுவல் மக்ரோன்

5 வைகாசி 2026 செவ்வாய் 14:45 | பார்வைகள் : 1841


ஈரான், ஒரு மாதத்திற்கும் மேலான அமைதிக்குப் பிறகு ட்ரோன்கள் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸை தாக்கியதை பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் “ஏற்க முடியாதது” என்று கண்டித்துள்ளார்.
 

அவர்,

பிரான்ஸ், எமிரேட்ஸுக்கு தனது முழு ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க அழைப்பு விடுத்தார்

பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.

ஈரான் தொடர்ந்தும் வளைகுடா நாடுகளின் மீதும் கப்பல்களின் மீதும் தாக்குதல்கள் நடத்துவதைப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது எனவும் பிரான்சின் ஜனாதிபதி  எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.