Paristamil Navigation Paristamil advert login

கருத்துக்கணிப்பு மீது நம்பிக்கை இல்லை : நயினார் நாகேந்திரன்

கருத்துக்கணிப்பு மீது நம்பிக்கை இல்லை : நயினார் நாகேந்திரன்

2 வைகாசி 2026 சனி 11:53 | பார்வைகள் : 213


கருத்துக்கணிப்புகள் மீது நம்பிக்கை இல்லை. அவை கருத்துத் திணிப்பாக உள்ளன,'' என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: கருத்துக்கணிப்புகள் மீது நம்பிக்கை இல்லை. அவை கருத்துத் திணிப்பாக உள்ளன. உண்மையான கணிப்புகள், மக்களின் எண்ணம் அனைத்தும் மே 4 ல் தெரிந்துவிடும்.

தவெக எங்கும் வெற்றி பெற வாய்ப்பு இல்லை. நாங்கள் வெற்றி பெறப்போவதால் அமைதியாக உள்ளோம். காஸ் பிரச்னை, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எதுவானாலும் மக்கள் நலன் கருதி மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.