நேபாளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்து - 20 பேர் பலி
1 வைகாசி 2026 வெள்ளி 06:46 | பார்வைகள் : 392
நேபாளத்தின் ரோல்பா மாவட்டத்தில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற ஜீப் ஒன்று மலைப்பாதையில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.
ரோல்பா மாவட்டத்தின் தபாங் கிராமப்புற நகராட்சி பகுதியில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த ஜீப், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 800 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 20 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் ரோல்பா மாவட்ட பொலிஸார் மற்றும் உள்ளூர் மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அந்த பகுதியில் பெய்த கனமழையால் சாலைகள் வழுக்கும் தன்மையுடன் இருந்ததே ஜீப் கட்டுப்பாட்டை இழக்கக் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
விபத்து தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan