Paristamil Navigation Paristamil advert login

கூகுள், மைக்ரோசாஃப்ட் அலுவலகங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

கூகுள், மைக்ரோசாஃப்ட் அலுவலகங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

15 பங்குனி 2026 ஞாயிறு 09:58 | பார்வைகள் : 621


கடந்த மாத இறுதியில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.

கூகுள், மைக்ரோசாஃப்ட் உட்பட மேற்கத்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் குறிவைக்கப்படும் என ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்த ஈரான் 14.03.2026 தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

சனிக்கிழமை கத்தார் மீது ஏவுகணைத் தாக்குதலை முன்னெடுத்த ஈரான், தலைநகர் தோஹாவில் அமைந்துள்ள கூகுள், மைக்ரோசாஃப்ட் உட்பட மேற்கத்திய தொழில்நுட்ப நிறுவனங்களைக் குறிவைத்துள்ளது.

இதில் இரண்டு ஏவுகணைகள் கத்தார் இராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் அச்சுறுத்தலை அடுத்து தோஹாவில் அமைந்துள்ள IBM, Palantir, Oracle மற்றும் Nvidia உட்பட பல தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வெளியேற்றியிருந்தது.

ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமேசான் தரவு மையங்கள் மற்றும் அலுவலகங்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதலை நடத்தியிருந்தது.

இதனிடையே, தோஹாவில் அரசு அலுவலகங்கள் மற்றும் கூகிள் அலுவலகம் உட்பட பலவற்றை கத்தார் அதிகாரிகள் காலி செய்தனர்.

HSBC கத்தாரில் உள்ள தனது கிளைகளை மூடிய நிலையில் துபாயில், பிரித்தானிய வங்கியான Standard Chartered தனது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படி உத்தரவிட்டது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் பொருளாதார மையங்கள் குறிவைக்கப்படும் என்ற ஈரானின் அச்சுறுத்தலை அடுத்து Citi மற்றும் Deloitte நிறுவனங்களும் ஊழியர்களை வெளியேற்றியுள்ளனர்.

சனிக்கிழமை இரவு ஈரானின் IRGC விடுத்த எச்சரிக்கையில், அமெரிக்கர்கள் பங்குதாரர்களாக உள்ள தொழிற்சாலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்களுக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படாமல் இருக்க, அப்பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.

இதன் பின்னரே, தோஹா மீதும் மத்திய கிழக்கில் பல நகரங்கள் மீதும் ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.