Paristamil Navigation Paristamil advert login

14 வயதில் 100 சிக்ஸர்கள்! சங்ககாரா நம்பிக்கை வைத்த சிறுவன் சூர்யவன்ஷி..?

 14 வயதில் 100 சிக்ஸர்கள்! சங்ககாரா நம்பிக்கை வைத்த சிறுவன்  சூர்யவன்ஷி..?

7 மாசி 2026 சனி 13:34 | பார்வைகள் : 195


வைபவ் சூர்யவன்ஷி இங்கிலாந்து அணிக்கு எதிராக U19 உலகக்கிண்ணத்தில் சதம் அடித்து பல சாதனைகளை படைத்தார்.

ஹராரேயில் நடந்த U19 உலகக்கிண்ணப் போட்டியில் இந்திய அணி 100 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி மகுடம் சூடியது.

இப்போட்டியில் 14 வயதான தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi) 80 பந்துகளில் 175 ஓட்டங்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 15 சிக்ஸர், 15 பவுண்டரிகள் அடங்கும்.

இதன்மூலம் U19 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 150 ஓட்டங்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

அதேபோல் U19 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சரித்திரத்தையும் படைத்துள்ளார்.

மேலும் இளையோர் ஒருநாள் போட்டிகளில் 100 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர், ஒரே இன்னிங்ஸில் 15 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற பிரம்மாண்ட சாதனைகளையும் செய்துள்ளார்.

அத்துடன் இளையோர் (U19) ஒருநாள் போட்டியில் 52 பந்துகளில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற சாதனையையும் கொண்டுள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி மொத்தமாக 110 சிக்ஸர்கள் அடித்துள்ள நிலையில், அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் 55 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி 2011ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் திகதி பீகாரில் உள்ள தஜிபூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் ஆவார்.

இவர் தனது 12 வயதிலேயே ரஞ்சிக் கிண்ணத் தொடரில் அறிமுகமாகி பீகாருக்காக விளையாடினார். பின்னர் 13வது வயதில் ஐபிஎல் தொடரில் களம் கண்டார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை 1.10 கோடிக்கு விலைக்கு வாங்கியது. அவர் முதலில் நம்பிக்கை வைத்தவர் இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாரா.

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக வைபவ் ஹிட்டிங் துடுப்பாட்டம் செய்தது சங்ககாராவை ஈர்த்தது.

அதன் பின்னர் ராகுல் டிராவிட்டின் வழிகாட்டுதல் மற்றும் பயிற்சியின் கீழ் மெருகேற்றப்பட்ட வைபவ் சூர்யவன்ஷிதான், தற்போது இந்திய அணி 2026 U19 உலகக்கிண்ணத்தை வெல்ல காரணமாக அமைந்துள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்