மின்னணு சிகரெட்டுகள் மற்றும் உடல்நலம் குறித்து புதிய எச்சரிக்கை!!
4 மாசி 2026 புதன் 07:55 | பார்வைகள் : 4442
மின்னணு சிகரெட்டுகள் (e-cigarettes) பயன்படுத்துவது பயனாளர்களுக்கு சுகாதார ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று பிரான்சின் தேசிய சுகாதார பாதுகாப்பு நிறுவனம் (Anses) எச்சரித்துள்ளது.
இந்த தயாரிப்புகளில் உள்ள நச்சுத் தன்மை மற்றும் சில நேரங்களில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய பொருட்களை மூச்சில் இழுப்பதால், நடுத்தர மற்றும் நீண்ட காலத்தில் புற்றுநோய், சுவாச, இதய நோய்கள் மற்றும் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி பாதிப்புகள் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
குறிப்பாக நிக்கோட்டின் கொண்ட மின்னணு சிகரெட்டுகள் இரத்த அழுத்தம் உயர்வதற்கும் இதய நோய்களுக்கு வழிவகுக்கும் சாத்தியம் அதிகம். அதனால், இளைஞர்கள் மற்றும் புகைபிடிக்காதவர்கள் வேப்பிங் (vapoter) செய்ய ஊக்குவிக்கப்படுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என Anses வலியுறுத்தியுள்ளது.
அதே நேரத்தில், பாரம்பரிய புகையிலையுடன் ஒப்பிடுகையில் மின்னணு சிகரெட்டுகள் குறைவான தீங்கு விளைவிப்பதால், புகையிலை பழக்கத்தை நிறுத்த முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு இது தற்காலிக உதவியாக இருக்கலாம் என்றும் Anses கூறுகிறது. ஆனால், புகையிலை மற்றும் வேப்பிங் இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவது அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், முழுமையாக நிறுத்துவதே இறுதி சுகாதார இலக்காக இருக்க வேண்டும்.
மேலும், மின்னணு சிகரெட்டுகளுக்கு அதிக வரி விதிப்பது சிலரை கட்டுப்பாடற்ற அல்லது வீட்டில் தயாரிக்கும் தயாரிப்புகளுக்கு தள்ளக்கூடும் என்பதால், அதுவும் கூடுதல் சுகாதார ஆபத்துகளை உருவாக்கலாம் என்று நிறுவனம் எச்சரித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan