Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்தவர் கைது

பிரித்தானியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்தவர் கைது

1 மாசி 2026 ஞாயிறு 11:35 | பார்வைகள் : 464


வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர், ஐக்கிய இராச்சியத்தில் வேலை வாங்கித்தருவதாக வாக்குறுதி அளித்து 01 மில்லியன் ரூபாயினை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மாத்தறை பிரிவின் அதிகாரிகள், குறித்த நபரை திக்வெல்ல - வெஹெல்ல பகுதியில் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் வெஹெல்ல, உருகமுவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்