Paristamil Navigation Paristamil advert login

மத்தியகிழக்கில் தீவிரமடையும் போர் - ஈரானில் 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி

மத்தியகிழக்கில் தீவிரமடையும் போர் - ஈரானில் 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி

4 பங்குனி 2026 புதன் 11:39 | பார்வைகள் : 1242


அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகின்றது.

ஈரானில் 1,000 க்கும் மேற்பட்டோர்  கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

சனிக்கிழமை போர் தொடங்கியதிலிருந்து குழந்தைகள் உட்பட 1,000 க்கும் மேற்பட்டோர் ஈரானில் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்கள் செய்தி நிறுவனம் (HRANA) தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிலவரப்படி, 181 குழந்தைகள் உட்பட குறைந்தது 1,097 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

மேலும், 100 குழந்தைகள் உட்பட 5,400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக HRANA தெரிவித்துள்ளது.

இந்தக் குழு தனது அறிக்கை முதற்கட்டமானது என்றும், மேலும் நூற்றுக்கணக்கான இறப்புகளைச் சரிபார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்