Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்

26 மாசி 2026 வியாழன் 14:37 | பார்வைகள் : 177


உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலை, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த விண்வெளி வீரர் ஒருவர் படம் பிடித்துள்ளார்.

இந்த காட்சி 2025 டிசம்பர் 26-27 இரவு நடந்த தாக்குதலின் போது பதிவு செய்யப்பட்டது.

ரஷ்யா, Kh-101 Cruise Missiles மற்றும் Iskander Ballistic Missiles பயன்படுத்தி பெரிய அளவிலான தாக்குதல் நடத்தியது.

ஏவுகணை வெடித்ததில் கீவ் நகரத்தின் மேல் தோன்றிய பிரகாசமான ஒளிகள் விண்வெளியில் இருந்து தெளிவாகக் காணப்பட்டன.

உக்ரைன் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள், பல ஏவுகணைகளை நடுவானில் தடுத்து அழித்தன.

இந்த காட்சிகளை விண்வெளி ஆர்வலர் ரிக்கார்டோ ரோஸ்சி ஆய்வு செய்து, இயற்கை நிகழ்வுகளான மின்னல் அல்லது விண்கல் விழுதல் அல்ல, இது ஏவுகணை தாக்குதலின் விளைவுகள் தான் என்பதை உறுதிப்படுத்தினார்.

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட இந்த காட்சிகள், போரின் தீவிரத்தையும், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் உலகம் முழுவதும் நேரடியாகக் காணக்கூடிய நிலையை வெளிப்படுத்துகின்றன.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்