கள்ளக்காதலில் அதிகம் ஈடுபடுவது ஆண்களா? பெண்களா? ஆய்வு தகவல்
26 தை 2026 திங்கள் 05:44 | பார்வைகள் : 473
கள்ள உறவு அல்லது திருமண உறவில் துரோகம் என்பது அந்த ஒரு மகிழ்ச்சியான திருமண உறவை முற்றிலும் சிதைக்கும் ஒரு விஷயமாகும். இது தம்பதிகளுக்கு கடுமையான மன வேதனையை ஏற்படுத்தக்கூடும், மேலும் அந்த உறவின் முடிவுக்கு வழிவகுக்கிறது. திருமணம் மீறிய உறவுகள் குறித்து உலகம் முழுவதும் பல ஆய்வுகள் நடந்து வருகிறது. இது தம்பதிகள் ஏன் திருமணம் மீறிய உறவுகளில் ஈடுபடுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள உதவுகிறது.
திருமண உறவில் துரோகம் செய்வதற்கு பாலின வேறுபாடுகள் இல்லையென்றாலும், ஆண், பெண் இருவரில் யார் அதிகம் கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள் என்பது கவலைக்குரிய கேள்வியாகும். யார் உறவுகளில் அடிக்கடி துரோகம் செய்கிறார்கள் என்பது குறித்து சமீபத்திய தரவுகள் வெளிச்சம் போடுகின்றன. இந்த பதிவில் கள்ள உறவு குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகள் பற்றியும், அதன் முடிவுகள் பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கிட்டதட்ட 20% திருமணங்கள் கள்ளக்காதலால் சிதைகிறது
திருமண உறவுகளை கள்ள உறவுகள் பெருமளவில் பாதிக்கிறது. ஆய்வுகளின்படி, திருமணமான ஆண்களில் சுமார் 20 சதவீதத்தினரும், திருமணமான பெண்களில் 13 சதவீதத்தினரும் தங்கள் வாழ்க்கைத் துணையை ஏமாற்றுவதாக ஆய்வுகள் கூறுகிறது. ஆய்வுகளின் படி, கிட்டத்தட்ட ஐந்து திருமணங்களில் ஒரு திருமணம் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் துரோகத்தைச் சந்திக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால் துரோகம் பாலினம் மற்றும் வயதுக் குழுவிற்கு ஏற்ப மாறுபடுகிறது. ஆச்சரியப்படும் விதமாக, 18 முதல் 34 வயதுக்குட்பட்ட இளம் வயதினரிடையே துரோகத்தின் விகிதம் குறைவாக உள்ளது.
பெண்களை விட ஆண்களே அதிகம் கள்ள உறவில் ஈடுபட வாய்ப்புள்ளது
திருமண உறவுகளில் பெண்களை விட ஆண்களே அதிக பாலியல்ரீதியாக துரோகம் செய்கிறார்கள் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. திருமணமான ஆண்களில் சுமார் 20% பேர் பாலியல்ரீதியாக துரோகம் செய்கிறார்கள், அதே சமயம் திருமணமான பெண்களில் 13% பேர் மட்டுமே கள்ள உறவில் ஈடுபடுகின்றனர். அனைத்து வயதுகளிலும் ஆண்களே அதிகம் கள்ளக்காதலில் ஈடுபடுகின்றனர். ஆண்களில் பெரும்பாலானவர்கள் தாங்கள் வேலை செய்யும் இடத்தில்தான் கள்ள உறவை தொடங்குகின்றனர். துரோகம் செய்வதற்கான காரணங்கள் நபருக்கு நபர் வேறுபடலாம்.
திருமணத்திற்கு முன்னரே கள்ள உறவில் ஈடுபடுகிறது அதிகமாகிறது
தற்போது திருமணத்திற்கு முன்னரே உறவில் ஈடுபடும் போக்கு அதிகரித்து வருகிறது. ஐந்து பேரில் ஒருவர், தங்களுக்குத் திருமணம் ஆவதற்கு முன்பு துரோகம் செய்திருப்பதாகக் கூறுகின்றனர். இது உறவுகளில் நம்பிக்கைத் துரோகம் ஆரம்பத்திலேயே தொடங்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது. திருமணத்திற்கு முன் துரோகம் செய்வது பல்வேறு காரணங்களால் நிகழலாம். இந்த புள்ளிவிவரம், பல தம்பதிகள் திருமணம் செய்வதற்கு முன்பே நம்பிக்கை தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் என்பதை உணர்த்துகிறது.
இளைஞர்களை விட வயதானவர்களே கள்ள உறவில் அதிகம் ஈடுபடுகிறார்கள்
இளம் வயதினரை விட முதியவர்களே திருமண உறவில் துரோகத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. அதிலும் வயதானவர்கள் தங்களை விட வயதில் குறைந்தவர்களுடன் கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள். இந்த போக்கு 2000-ஆம் ஆண்டு முதல் உருவாகியுள்ளது. இளம் வயதினருடன் ஒப்பிடும்போது, 55 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் தங்கள் துணைகளுக்குத் துரோகம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. கடந்த தசாப்தங்களில் நடுத்தர வயதுடையவர்களிடையே துரோக விகிதங்கள் உச்சத்தில் இருந்த நிலையில், தற்போது அதில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
வயது அதிகரிக்கும் போது பெண்கள் அதிகம் துரோகம் செய்கிறார்கள்
பெண்களின் துரோக விகிதங்களில் வயது ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. பெண்களின் வயது அதிகரிக்கும் போது, அவர்கள் துரோகம் செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த மாற்றம், மாறிவரும் வாழ்க்கைச் சூழ்நிலைகள் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம். பெண்களுக்கு வயதாகும்போது, அவர்கள் தங்கள் ஆசைகளில் அதிக நம்பிக்கை கொள்வதோடு, சமூகத்தின் விமர்சனங்கள் மீதான அலட்சியமும் காரணமாக இருக்கலாம். நீண்ட கால உறவில் திருப்தியின்மை அல்லது புதிய அனுபவங்களுக்கான ஆசை போன்ற காரணிகள் இந்த அதிகரிப்பிற்கு காரணமாக இருக்கலாம்.
பணியிடங்களில் கள்ள உறவுகள் அதிகமாக உள்ளது
திருமணத்திற்குப் புறம்பான உறவுகளுக்குப் பணிபுரியும் இடம் ஒரு பொதுவான களமாக உள்ளது. மக்கள் தங்கள் வாழ்க்கைத்துணையுடன் சக ஊழியர்களுடன் அதிக நேரம் செலவிடுகிறார்கள், இது அவர்களுக்குள் நெருக்கத்தை அதிகரிக்கிறது. துரோகம் செய்யும் ஆண்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் பணியிடத்தைச் சேர்ந்த ஒருவருடன்தான் கள்ள உறவு வைத்துக் கொள்கின்றனர். பகிரப்பட்ட அனுபவங்களும், வேலையின் அழுத்தங்களைப் பற்றிய பரஸ்பர புரிதலும் சக ஊழியர்களிடையே பிணைப்புகளை உருவாக்கக்கூடும். இந்தத் தொடர்புகள் சில சமயங்களில் காதல் உணர்வுகளாக மாறலாம்.
14 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் செல்வரத்தினம் இராசம்மா
Roissy en brie (பிரான்ஸ்), யாழ்ப்பாணம் வண்வடமேற்கு
வயது : 87
இறப்பு : 12 Jan 2026
-
125






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan