Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சு கலாச்சாரக் கதைகள் – சாந்தியி அரண்மனை

பிரெஞ்சு கலாச்சாரக் கதைகள் – சாந்தியி அரண்மனை

14 தை 2026 புதன் 11:05 | பார்வைகள் : 170


பிரான்சின் சாந்தியி அரண்மனை 2025 ஆம் ஆண்டு அபூர்வமான வெற்றியை பதிவு செய்துள்ளது. “பிரான்சின் மிகவும் விரும்பப்படும் நினைவுச்சின்னம்” என்ற பட்டத்தைப் பெற்றதன் பின்னர், அரண்மனையின் புகழ் தேசியமும் சர்வதேசமும் அளவில் பெரிதும் உயர்ந்தது. இதன் விளைவாக, பார்வையாளர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து, ஆண்டுக்கு ஆறரை இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர். பண்டிகைக் காலங்களில் தினமும் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் வந்தது ஒரு சாதனையாகும்.

இந்த வெற்றிக்கு பல காரணங்கள் உள்ளன: வளமான கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள், வரலாற்று பாரம்பரியத்தை வெளிப்படுத்திய முக்கியக் கண்காட்சி, மேலும் தொலைக்காட்சி மூலம் கிடைத்த தேசிய அங்கீகாரம். தாவரவியல் விழாக்கள் மற்றும் குதிரை சார்ந்த கலை நிகழ்ச்சிகளும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

அரண்மனையின் மிக முக்கியமான செல்வங்களில் ஒன்றாகிய அரிய நூல்கள் கொண்ட நூலகம், ஐரோப்பாவின் சிறந்த நூலகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால் காலப்போக்கில் அது சேதமடையும் அபாயத்தில் இருப்பதால், அதனை பாதுகாக்கும் நோக்கில் நிதி திரட்டும் முயற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

2026 ஆம் ஆண்டும் நல்ல தொடக்கத்துடன் ஆரம்பித்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பாவின் பல நாடுகள் மற்றும் உலகின் பல பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், சாந்தியி அரண்மனையைப் பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த காலத்தின் பொக்கிஷமாக இருந்தாலும், எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் இந்த அரண்மனை, “சாந்தியி 2030” என்ற திட்டத்தின் மூலம் தனது பண்பாட்டு பாரம்பரியத்தை நீண்ட காலத்திற்கு பாதுகாக்க முனைகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்