Paristamil Navigation Paristamil advert login

சம்பாரவை பொங்கல்

சம்பாரவை பொங்கல்

13 தை 2026 செவ்வாய் 13:20 | பார்வைகள் : 112


பொங்கல் பண்டிகை வந்துவிட்டது. வழக்கம் போல் கண்டிப்பாக அனைவரது வீட்டிலும் சர்க்கரைப் பொங்கலும் வெண் பொங்கலும் செய்து மகிழ்ச்சியாக சாப்பிடுவீர்கள். ஆனால் உங்கள் வீட்டில் யாரேனும் சர்க்கரை நோயாளிகள் இருந்தால் அவர்களால் சர்க்கரை பொங்கலை சாப்பிட முடியாது.

வெண் பொங்கல் சாப்பிடலாம் ஆனால் முடிந்த வரை அரிசியை தவிர்ப்பது நல்லது. அதனால் பொங்கல் பண்டிகைக்கு அவர்களுக்கு ஏதேனும் ஸ்பெஷலாக செய்து கொடுக்க விரும்பினால் இந்த சம்பாரவை பொங்கலை செய்து கொடுங்கள். மகிழ்ச்சியாக உண்பார்கள்.

தேவையான பொருட்கள்: சம்பாரவை - 1 கப் பாசிப்பருப்பு - முக்கால் கப் உப்பு - தேவைக்கேற்ப இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு சீரகம் - ஒரு டீஸ்பூன் மிளகு - ஒரு டீஸ்பூன் பச்சை மிளகாய் - ஒன்று பெருங்காயம் - ஒரு சிட்டிகை கறிவேப்பிலை - ஒரு கீற்று நெய் (அ) எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: கடாயில் பாசிப்பருப்பைப் போட்டு லேசாக வறுத்துக் கொள்ளவும். குக்கரில் சம்பாரவையுடன் பாசிப்பருப்பைச் சேர்த்து, 4 1/2 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து 4 விசில் வரும் வரை வேக விடவும். ஒரு பாத்திரத்தில் நெய் (அ) எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயம், சீரகம், மிளகு சேர்த்து தாளிக்கவும்.

பிறகு இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து வதங்கியதும் அடுப்பை அணைக்கவும். வேக வைத்த சம்பா ரவை, பாசிப்பருப்புடன் தாளித்தவற்றைக் கொட்டி நன்றாகக் கிளறவும். சுவையான சம்பா ரவை பொங்கல் தயார். விருப்பப்பட்டால் முந்திரியை வறுத்துச் சேர்க்கவும்.

குறிப்பு : இந்த பொங்கலில் சம்பா ரவைக்கு பதில் கோதுமை ரவையில் செய்தால் கோதுமை ரவை பொங்கல் தயார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்