Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

பூசணி விதையில் ஒளிந்துள்ள ஆரோக்ய மர்மங்கள்..!!

பூசணி விதையில் ஒளிந்துள்ள ஆரோக்ய மர்மங்கள்..!!

16 ஆனி 2020 செவ்வாய் 12:30 | பார்வைகள் : 15781


பூசணி விதையை நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதுண்டு. ஆனால் அது உடல்நலத்துக்கு ஆரோக்யம் கொண்டுவரும் ஒரு மர்மமான விதையாகும். 
 
வயதுவந்த 345 ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஆறு மாதங்கள் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு தினமும் உலர்ந்த பூசணி விதைகள் உண்ண கொடுக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் பல உண்மைகளை கொண்டுவந்தது. 
 
பூசணி விதைகள் நிறைவுறா கொழுப்பு அமிலங்கள், ப்ரோட்டீன் மற்றும் ஃபைபர் போன்றவற்றை தோற்றுவிக்கின்றன. 
 
இதனால் உங்கள் உடலின் எடையை குறைக்க இது பெரிதும் உதவுகிறது. 
 
தவிர, நாள் முழுவதும் உற்சாக மிகுதியாக இருக்க இந்த பூசணி விதைகள் உதவுகின்றன. 
 
பூசணி விதைகளை எவ்வாறு உட்கொள்வது??!!
 
*பூசணி விதைகள் உலர்ந்தவையாக இருக்க வேண்டும். அதன் மேல் புற கோதுகளை நீக்கிவிட்டு, வெள்ளை நிற உள்ளீடை உண்ண வேண்டும்.
 
*இதனை ஓட்ஸ் கஞ்சியுடனோ, அல்லது யோகட் தயிருடனோ சேர்ந்து உண்ணலாம். 
 
*ஸ்மூதீஸ் தயாரிக்கும் போது இந்த உலர் விதைகளை போட்டு ஸ்மூதீஸ் தயாரிக்கலாம்.
 
*****
 
தினமும் 30 கிராம் வரை பூசணி விதைகளை உட்கொண்டால்... பூசணிக்காய் போய் ஆகாமல் தவிர்க்கலாம்.. அடடே...!!

வர்த்தக‌ விளம்பரங்கள்