Paristamil Navigation Paristamil advert login

Prime de Noël: கிறிஸ்துமஸ் உதவியை நிறுத்தும் அரசாங்கம்!!

Prime de Noël: கிறிஸ்துமஸ் உதவியை நிறுத்தும் அரசாங்கம்!!

4 கார்த்திகை 2025 செவ்வாய் 15:30 | பார்வைகள் : 2203


அரசு, குழந்தைகள் இல்லாத பயனாளர்களுக்கு வழங்கப்படும் கிறிஸ்துமஸ் போனஸை (Prime de Noël) ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. இந்த போனஸ் பொதுவாக RSA (சமூக நல உதவி) பெறுவோருக்கும், வேலை இழந்தவர்களுக்கும் வழங்கப்படுகிறது. 

இது 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவியாக இருந்தது. ‘le Secours populaire’ அமைப்பு இதை ரத்து செய்வது குறித்து கவலை தெரிவித்துள்ளது, ஏனெனில் இந்த போனஸ் பல ஏழை குடும்பங்களுக்கு மின்சார கட்டணம் அல்லது வங்கி ஓடியை சரிசெய்ய உதவுகிறது. இது பரிசுகளுக்காக அல்ல, வாழ்வைத் தாங்கிக் கொள்ள உதவும் ஒரு முக்கிய உதவி என அவர்கள் கூறுகின்றனர்.

அமைப்பின் தேசிய செயலாளர் நிக்கோலஸ் ஷாம்பியன் (Nicolas Champion) கூறியதாவது: வறுமை என்பது குழந்தைகள் உள்ள குடும்பங்களில் மட்டும் இருக்காது; 44% பயனாளர்கள் தனியாக வாழ்பவர்கள் முதியோர்,  மாணவர்கள் போன்றவர்கள். 1998ல் உருவாக்கப்பட்ட இந்த போனஸ், மிகவும் தாழ்ந்த வருமானம் கொண்டவர்களுக்கு ஆண்டு தோறும் நம்பிக்கையைக் கொடுத்த ஒரு ஆதரவாக இருந்து வந்தது.

வர்த்தக‌ விளம்பரங்கள்