மெஹூல் சோக்சி நாடு கடத்தலை எதிர்த்து பெல்ஜியம் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு
4 கார்த்திகை 2025 செவ்வாய் 12:30 | பார்வைகள் : 163
இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என பெல்ஜியம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய வைர வியாபாரி மெஹூல் சோக்சி, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி மெஹுல் சோக்சி, அவரது உறவினர் நிரவ் மோடி இணைந்து மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில், 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல், 2018ல் வெளிநாடு தப்பிச் சென்றனர்.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் நிரவ் மோடி, 2019ல் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியா அழைத்து வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மற்றொரு குற்றவாளியான மெஹுல் சோக்சி, 2018ல் அமெரிக்கா தப்பி சென்றார். அங்கிருந்து, கரீபிய தீவு நாடான ஆன்டிகுவா சென்று குடியேறினார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மெஹுல் சோக்சி, ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதைத் தொடர்ந்து, சோக்சியை பெல்ஜியம் போலீசார் கடந்த ஏப்ரலில் கைது செய்து, அந்நாட்டு சிறையில் அடைத்தனர். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க பெல்ஜியம் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.இதை எதிர்த்து சோக்சி தாக்கல் செய்த மனுவையும் , ஆன்ட்வெர்ப் மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் மெஹூல் சோக்சியை மும்பையில் உள்ள ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஆன்டவெர்ப் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மெஹூல் சோக்சி கடைசி முயற்சியாக பெல்ஜியம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan