Saint-Denis: Collège Pablo-Neruda பாடசாலைக்கு திரும்புவதில் இடையூறு ஏற்படலாம்!!
19 ஐப்பசி 2025 ஞாயிறு 17:50 | பார்வைகள் : 5796
Saint-Denisஇல், Pablo-Neruda பாடசாலைக்கு அருகிலுள்ள ஒரு பாழடைந்த வீட்டில் ஏற்பட்ட தீவிபத்து, பள்ளியின் சில ஜன்னல்கள் மற்றும் சுவரை சேதப்படுத்தியுள்ளது. தீயின் காரணமாக சுமார் 100 சதுரமீட்டர் சுவர் கருகி, கற்றல் உபகரணங்களும் சேதமடைந்துள்ளன. தீயணைப்புப் படையினர் உடனடியாக விரைந்து தீயை கட்டுப்படுத்தினாலும், தீயின் தாக்கம் பாடசாலையை சென்றடைந்துள்ளது.
முதல்கட்ட விசாரணைகளின்படி, வீட்டின் உரிமையாளர் குப்பைகளை எரிக்க முயன்றதால் தீ பரவியதாக கூறப்படுகிறது. 650 மாணவர்களுடன் செயல்படும் collège Pablo-Neruda தற்போது இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளது, ஏனெனில் தீவிபத்து பள்ளி விடுமுறைக்குள் ஏற்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து, பழுதுபார்த்து சரிசெய்யும் பணிகளை தொடங்கியுள்ளது. நவம்பர் 3ஆம் தேதி திறப்பதற்கான சாத்தியங்களை பரிசீலிக்கின்றனர். மாணவர்களின் கல்வி தொடர, கல்வித்துறையுடன் இணைந்து தீர்வுகள் கொண்டு வரப்படுவதாகவும், சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan