காஸாவில் ஊடகவியலாளர்கள் பலி! - மக்ரோன் கண்டனம்!!

25 ஆவணி 2025 திங்கள் 21:38 | பார்வைகள் : 1229
காஸாவில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இஸ்ரேல் துருப்புக்கள் மேற்கொண்ட தாக்குதலில் 20 பேர் ஒரே நேரத்தில் கொல்லப்பட்டுள்ளனர். அவற்றில் ஐந்து ஊடகவியலாளர்களும் பலியாகியுள்ளனர். “மிகவும் கண்டனத்துக்குரியது. இஸ்ரேல் சர்வதேசி விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் எந்த போர்ச்சூழலிலும் பாதுகாக்கப்படவேண்டியவர்கள். இந்த குற்றச்செயல்கள் உடனடியாக நிறுத்த வேண்டும்” என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு தெவிக்கையில், ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டது ஒரு மோசமான விபத்து என தெரிவித்தார். AP, Reuters, Al Jazeera போன்ற ஊடகங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களே கொல்லப்பட்டுள்ளனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1