Lyon-Porto விமானம் அவசர தரையிறக்கம்: விமானி அறைக்குள் நுழைய முயன்றவர் கைது!!
23 ஆவணி 2025 சனி 15:58 | பார்வைகள் : 7144
EasyJet நிறுவனத்தின் Lyon-Porto விமானத்தில், வெள்ளிக்கிழமை மாலை பயணம் செய்த 26 வயதுடைய போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ஒருவர், விமானம் புறப்பட்டதற்கு பிறகு விமானி அறைக்குள் நுழைய முயன்ற ஒரு பயணி மயக்கமடைந்த நிலையில் மற்ற பயணிகள் அவரை கட்டுப்படுத்தி வைத்துள்ளனர்.
விமானம் திரும்பி லியோனில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் அவர் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனைகளில் அவருக்கு விமானப் போக்குவரத்து கோளாறு மற்றும் மயக்கம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அவர் காவல் துறையினருக்கு அறியப்படாத நபராக இருந்ததால், நேரடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் விமானம் மீண்டும் புறப்பட்டு Portoவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan