Paristamil Navigation Paristamil advert login

இரத்தம் சேகரிப்பில் - இனிமேல் பாலினங்கள் தரவு இல்லை!!

இரத்தம் சேகரிப்பில் - இனிமேல் பாலினங்கள் தரவு இல்லை!!

22 ஆவணி 2025 வெள்ளி 18:10 | பார்வைகள் : 1571


 

இரத்தம் சேகரிக்கப்படும் போது பதிவு செய்யப்படும் பாலினங்கள் தரவுகள் இனிமேல் நீக்கப்படும் என பிரெஞ்சு இரத்த வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பில் l'Établissement français du sang தெரிவிக்கையில், இரத்தம் சேகரிக்கப்படும் போது, அதன் தரவுகளில், கொடையாளர்களின் பாலிய விபரங்கள் இதுவரை பதியப்பட்டு வந்தன. தற்போது ஓரினச்சேர்க்கையாளர்களின் விபரங்கள் அதில் இருப்பதால் ஏற்படும் வீண் குழப்பங்களை தவிர்க்கும் பொருட்டு அவற்றை நிரந்தரமாக நீக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் வாரங்களிலோ, மாதத்திலோ இவை நடைமுறைக்கு வர உள்ளன.

இணையம் மூலம் கொண்டுவரப்பட்ட மனு ஒன்றின் அடிப்படையில் இந்த முடிவினை EFS எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்